சாய்ந்தமருது பிரதேசத்தில் வீடொன்றில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் அங்கிருந்தவர்களில் ஒரு சிலர் உயிர் தப்பியிருந்தனர். அவர்களில் சஹ்ரானின் மனைவியும் ஒருவர். அவர் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சாட்சியமளிக்கும் போது, சாராவை ஒருவர் துக்கிச் செல்வதை கண்டதாக குறிப்பிட்டிருக்கிறார். அப்படியானால் சாராவை யார் தூக்கிச் சென்றது என்பதை அறிந்துகொள்ள வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்த அவர்
சாராவை யார் தூக்கிச்சென்றது என்பதனை அறிந்துகொள்ள வேண்டும் என்றால் மேஜர்சுபசிங்கவிடம் கேளுங்கள். அப்போது கிழக்கு மாகாண கட்டளைத்தளதியாக இருந்தவர், அரசாங்கத்தின் பிரதிபாதுகாப்பு அமைச்சர் அநுர ஜயசேகர.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்த அவர்
சாராவை யார் தூக்கிச்சென்றது என்பதனை அறிந்துகொள்ள வேண்டும் என்றால் மேஜர்சுபசிங்கவிடம் கேளுங்கள். அப்போது கிழக்கு மாகாண கட்டளைத்தளதியாக இருந்தவர், அரசாங்கத்தின் பிரதிபாதுகாப்பு அமைச்சர் அநுர ஜயசேகர.
அதனால் சாராவை எங்கு அழைத்துச் சென்றார்கள் என்பதை தற்போதுகேளுங்கள். சாரா உயிருடன்தான் இருக்கிறார்.
ஆனால் சாரா மரணித்துள்ளார் என தெரிவிப்பதற்கு கடந்த அரசாங்கம் முயற்சித்து வந்தது. அதற்காக மூன்று தடவை டீ,என்.ஏ. பரிசோதனை நடத்தினார்கள். இரண்டு பரிசோதனைகளிலும் சாரா உயிரோடு இருப்பதாகவே தெரிவிக்கப்பட்டது.
ஆனால் சாரா உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கும் பொய் பரிசோதனை அறிக்கையை பெறுவதற்கு சென்றவர்தான் தற்போதைய பதில் பொலிஸ்மா அதிபர் விக்ரமரத்ன. அவருடன் யார் சென்றார் என்பதை விக்ரமரத்னவிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
அதாவது இந்த தாக்குதலுக்கு சம்பந்தப்பட்ட வலையமைப்பு இந்த அரசாங்கத்துக்குள் இன்னும் செயற்பட்டு வருகிறது.
இதேவேளை, கடந்த சில தினங்களுக்கு முன்னர் போரா இனத்தவர்களின் மத நிகழ்வொன்று பம்பலப்பிட்டியில் இடம்பெற்றது.
அங்கு ஒருவர் சென்று படம் பிடித்தார். அதன்போது அவரை அங்கிருந்த பொலிஸார் கைது செய்து பம்பலப்பிட்டி பொலிஸ{க்கு கொண்டு சென்றுவிசாரணை மேற்கொண்டபோது, அவர்தான் உயிர்த்தஞாயிறு தாக்குதல் சம்பவத்தின்போது, சஹ்ரானின் குழுவில் இருந்த பொடி சஹ்ரான் என்ற ஒருவர்.
அவர்தான் சொனிக் சொனிக் உடன் செயற்பட்டு. ஐ.எஸ்.ஐ.எஸ்ஸ{ மின்னஞ்சல் அனுப்பியவர். இவர் தற்போது நீதிமன்றபிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையிலே பாரோ இனத்தவர்களின் விழாவுக்கு சென்று அங்கு படம்பிடித்துள்ளார்.
அவர் கடந்த மாதம் 28ஆம் திகதி கைது செய்யப்பட்டு இந்த மாதம் முதலாம் திகதி விடுவிக்கப்படுகிறார்.எப்படி அவ்வாறு விடுவிக்க முடியும்?
ஆனால் கையடக்க தொலைபேசியில் இஸ்ரேலுக்கு எதிரான படம் ஒன்றை வைத்திருந்த குற்றத்துக்காக மாவனல்லையைச் சேர்ந்த சுஹைல் என்ற இளைஞன் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு“ கடந்த 9 மாதங்களாக சிறையில் வைக்கப்பட்டிருக்கிறார். குறித்த இளைஞனின் பட்டமளிப்பு விழா கடந்த ஜனவரி மாதம் இருந்தது அதற்கும் அவரால் கலந்துகொள்ள முடியவில்லை.
குறித்த இளைஞன் தற்போது , போதைப்பொருளுடன் சம்பந்தப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களு
இஸ்ரேலுக்கு எதிரான படம் கையடக்க தொலைபேசியில் இருந்தமைக்காக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்வதற்கு எமது நாட்டில் இருக்கும் பொலிஸார்இஸ்ரேலின் மொசாட்டா எனக் கேட்கிறேன்.
பொடி சஹ்ரானை எந்தப் பிரச்சினையும் இல்லாமல் விடுவிக்கிறார்கள். இதன் மூலம், உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் வலையமைப்பு அரசுக்குள் இன்னும் செயற்படுகிறதுஎன்பது தெளிவாகிறது.
அதேபோன்று அபூ ஹிந் யார்? இந்தியாவின் றோஅமைப்பு இலங்கையின் புலனாய்வுப் பிரிவுடன் பயிற்சி ஒன்றை மேற்கொண்டு வந்தது. அப்போது இந்தியாவின் றோ அமைப்பு இலங்கையின் புலனாய்வு அதிகாரி ஒருவரை அறிமுகப்படுத்தியது அபூஹிந் என்றாகும். யார்அந்த அபூ ஹிந் என்பதை தற்போது அரசாங்கம் கண்டு பிடிக்க வேண்டும் என்றார்