'உங்கள் பொருளாதாரத்தை அழித்துவிடுவோம்.." சீனா, இந்தியாவை எச்சரித்த அமெரிக்காக



ரஷ்யாவிடமிருந்து  கச்சா எண்ணெய் வாங்கும் சீனா , இந்தியா  மற்றும் பிரேசில்  போன்ற நாடுகளுக்கு அமெரிக்க  ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்  நூறு சதவீதம் வரி விதிக்கவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உக்டீரன் மீது போர் நடத்தி வருவதால் ரஷ்யா மீது அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடை நடைமுறையில் உள்ளது.

இருப்பினும் இந்தியா, சீனா மற்றும் பிரேசில் உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கி வருகின்றது.

இந்த வர்த்தகத்தின் மூலம் கிடைக்கும் பணத்தை கொண்டு ரஷ்யா போரை நீட்டித்து வருவதாக ட்ரம்ப் குற்றம்சாட்டி வருகின்றார்.

இந்தநிலையில், ட்ரம்ப் தலைமையிலான அமைச்சரவையில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் லிண்ட்சே கிரகாம் புதிய மிரட்டல் ஒன்றை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அவர்,
“ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் சீனா, இந்தியா மற்றும் பிரேசில் போன்ற நாடுகளுக்கு ட்ரம்ப் நூறு சதவீதம் வரி விதிக்க உள்ளார்.

இந்தியா, சீனா மற்றும் பிரேசில் போன்ற நாடுகளுக்கு நான் கூறுவது என்னவென்றால், நீங்கள் தொடர்ந்து ரஷ்யாவிடமிருந்து மலிவு விலையில் கச்சா எண்ணெய் வாங்கி உக்ரேன் போர் நீடிக்க அனுமதித்தால் உங்கள் பொருளாதாரத்தை நாங்கள் அழித்து விடுவோம்” என அவர் தெரிவித்துள்ளார்.