‘இருவரும் சேர்ந்து தங்கள் நாடுகளுக்கான அழகான எதிர்காலத்தை கட்டமைப்போம்’: வாழ்த்துச் செய்தியில் கிம்!

 

இருவரும் சேர்ந்து தங்கள் நாடுகளுக்கான அழகான எதிர்காலத்தை கட்டமைப்போம் என சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்கிற்கு அனுப்பிய வாழ்த்துச் செய்தியில் வடகொரிய தலைவர் கிம் ஜோங் தெரிவித்துள்ளார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாட்டில் ஸி ஜின்பிங், மூன்றாவது முறை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டதற்கு உலகத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், வடகொரிய தலைவர் கிம் ஜோங், சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்கிற்கு வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார்.

இதேவேளை, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ‘நமது நாடுகளுக்கிடையேயான மூலோபாய ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் எங்கள் ஆக்கபூர்வமான உரையாடல் மற்றும் நெருக்கமான, பொதுவான பணிகளைத் தொடர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.