'செவ்வந்தியின் சிரிப்புக்கு முற்றுப்புள்ளி.. இனி கதறி அழுவார்..." பொலிஸார் அதிகாரியின் எச்சரிக்கை பதிவு



 பாதாள உலக குழு உறுப்பினர்கள் மற்றும் குற்றவாளிகளை நாட்டுக்குள் அழைத்து வரும்போது ஊடகங்கள் குவிந்திருப்பதை அவர்கள் அறிவார்கள். கமராக்களைப் பார்த்ததும் புன்னகையை உதிர்ப்பார்கள் ஆனால், கொழும்பு குற்றவியல் பிரிவுக்குள்  நுழைந்ததும் கதறி அழுது, பீதியில் உறைந்து போவார்கள் என பொலிஸ் அதிகாரி நிஷாந்த சொய்ஸா தெரிவித்தார்.

இஷாரா செவ்வந்தியை நேபாளத்தில் இருந்து அழைத்து வந்த நிலையில் அவர் ஊடகங்களுக்கு முன்னர் சிரித்த முகத்துடன் செல்லும் காட்சி வெளியாகியிருந்த நிலையிலேயே பொலிஸ் அதிகாரி இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,


 சட்டம் அல்லது நீதிமன்றங்கள் தலையிடும்போது, அவர்கள் சாதாரணமான ஒருவரைப் போலவே ஆகிவிடுகிறார்கள்.

அவர்களின் ‘வீர சாகசங்கள்’ அனைத்தும் அதோடு முடிந்துவிடுகின்றன.

“சட்ட வளாகத்திற்குள் எந்த வீரர்களும் இல்லை!” என்பதே நிதர்சன உண்மை என  நிஷாந்த சொய்ஸா மேலும் தெரிவித்தார்.

இதேநேரம் இஷாரா செவ்வந்தி விமானத்தில் வந்திறங்கிய விதம்தான் தற்போது பாரிய பேசுபொருளுக்கு உள்ளாகியுள்ளாகியுள்ளது.

காரணம், அவரின் உடல்மொழி புலனாய்வுப் பிரிவில் நன்கு பயிற்சி பெற்ற ஒருவர் போல தோற்றமளிப்பதாக பாரிய சந்தேகம் தோற்றம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.