முதன்முறையாக நானோ செயற்கைக்கோளை ஏவிய சிம்பாவே..!


சிம்பாவே முதன்முறையாக ஒரு நானோ செயற்கைக்கோளை விண்ணில் ஏவியுள்ளது.

சிம்பாவே நாடு பொதுவாக கிரிக்கெட் விளையாடுதான் அறிந்திருப்போம், ஆனால், இந்த நாடு பலதுறையில் தன் கவனத்தைச் செலுத்தி வருகிறது.

சிம்பாவேயில் அதிபர் எம்மர்சன் மனாகவா தலைமையிலான ஆட்சி நடந்து வரும் நிலையில், இந்த அரசு அமெரிக்காவின் வர்ஜீனியாவில் இருந்து ஒரு விண்கலம் ஏவப்பட்டது.

இதனுடன் சிம்சாட் -1 என்ற சிம்பாவேயின் நானோ செயற்கைக் கோளும் விண்ணில் ஏவப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

இந்தச் செயற்கைக் கோள் ஏவியது குறித்து, சிம்பாவே அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும் இந்த நானோ செயற்கைக்கோள், நாட்டின் விவசாயம் மேம்படுத்துவதற்காகவும், பேரிடர்கள் பற்றி கங்காணிப்பதற்கும், நாட்டிலுள்ள கனிம வளங்கள் பற்றி அறிவதற்கும் இது உதவும் என்று தெரிவித்துள்ளது.