யாழ்ப்பாணம் வல்லை முனியப்பர் ஆலய வளாகத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் ஒன்றை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
குறித்த ஆலய வளாகத்தில் உள்ள பழக்கடையில் பணிபுரியும் ஆண் (வயது 36) ஒருவரே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார்.
இதன் பின்னணி தற்கொலையா கொலையா என காவல்துறையினர் ஐயம் வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நெல்லியடி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.