நீங்கள் ஒருபோதும் தனியாக நிற்க மாட்டீர்கள்: உக்ரைன் ஜனாதிபதிக்கு பைடன் ஆறுதல்!


ரஷ்யாவுடனான போரில் உக்ரைன் எப்போதும் தனித்து நிற்காது என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய படையெடுப்பு தொடங்கிய பின்னர் தனது முதல் வெளிநாட்டு பயணமான அமெரிக்கா சென்ற உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி, நேற்று (புதன்கிழமை) அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதன்போது, உக்ரைனுக்கு அதிநவீன பேட்ரியாட் வான்பாதுகாப்பு ஏவுகணை, போர் விமானங்களில் பொருத்தப்படும் அதிநவீன குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் உட்பட மேலும் 2 பில்லியன் டொலர்கள் மதிப்பிலான இராணுவ உதவிகளுக்கான தொகுப்பினை பைடன் உறுதியளித்தார்.

இதனைத்தொடர்ந்து, நடைபெற்ற கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த பைடன், ‘சர்வதேச கூட்டணியை ஒன்றாக வைத்திருப்பது பற்றி எந்தக் கவலையும் இல்லை. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு இந்த கொடூரமான போரை நிறுத்தும் எண்ணம் இல்லை’ என கூறினார். அமெரிக்காவின் ஆதரவுக்கு தனது நன்றியைத் ஸெலென்ஸ்கி, தெரிவித்தார்.

உக்ரைனின் மிக முக்கியமான நட்பு நாடாக, அமெரிக்கா ஏற்கனவே 50 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மனிதாபிமான, நிதி மற்றும் பாதுகாப்பு உதவிகளை வழங்கியுள்ளது. இது மற்ற எந்த நாட்டையும் விட அதிகம்.

எங்கள் மதிப்புகள் மற்றும் சுதந்திரத்தைப் பாதுகாக்க எங்களுக்கு உதவ உக்ரைனுக்கு காங்கிரஸ் கூடுதல் 45 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கும் என்று ஸெலென்ஸ்கி, நம்பிக்கை தெரிவித்தார்.

குடியரசுக் கட்சியினர் ஜனவரியில் பிரதிநிதிகள் சபையின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றுவார்கள். ஆனால், உக்ரைனுக்கு ஆதரவு வழங்கமாட்டோம் என எச்சரித்துள்ளனர். காங்கிரஸில் மாற்றங்கள் இருந்தாலும், தனது நாட்டிற்கு இரு கட்சி ஆதரவு இருக்கும் என்று நம்புவதாக ஸெலென்ஸ்கி, கூறினார்.

வெள்ளை மாளிகை கூட்டத்திற்குப் பிறகு, 44 வயதான உக்ரைனிய ஜனாதிபதி காங்கிரஸின் கூட்டு அமர்வில் உரையாற்றினார், அங்கு அவர் கைத்தட்டலுடன் வரவேற்கப்பட்டார்.

அவர் அமெரிக்க சட்டமியற்றுபவர்களிடம் தனது நாடு இன்னும் எல்லா முரண்பாடுகளுக்கும் எதிராக நிற்கிறது என்றும் அடுத்த ஆண்டு மோதலில் திருப்புமுனை என்றும் கணித்தார்.

உக்ரைன் ஒருபோதும் சரணடையாது என்று உறுதியளித்தாலும், அதற்கு மேலும் ஆயுதங்கள் தேவை என அவர் கூறினார். ‘ரஷ்ய இராணுவம் முழுமையாக வெளியேற, மேலும் பீரங்கி மற்றும் குண்டுகள் தேவை,’ என்று அவர் மேலும் கூறினார்.

அமெரிக்காவினால் அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு உதவித் தொகுப்பில் ஒரு புதிய பேட்ரியாட் ஏவுகணை அமைப்பு உள்ளது, இது உக்ரைன் தனது நகரங்களை ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களில் இருந்து பாதுகாக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.