கனடாவில் புலம்பெயர்ந்தவர்கள் மீது மோசமான இனவெறி தாக்குதல்


கனடாவில் புலம்பெயர்ந்தவர்கள் இருவர் மோசமான முறையில் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவின் பிரின்ஸ் எட்வர்ட் தீவில் நிகழ்ச்சி ஒன்றின்போது இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கடந்த சனிக்கிழமை 1.30 மணியளவில் பிரின்ஸ் எட்வர்ட் தீவிலுள்ள Évangéline Recreation Centre என்ற இடத்துக்கு காவல்துறையினர் அழைக்கப்பட்டனர். அங்கு புலம்பெயர்ந்தோர் இருவர் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

புலம்பெயர்ந்தோர் நம்பிக்கையுடன் வாழ்ந்துவரும் அந்த பகுதியில் இனவெறுப்புத் தாக்குதல் நடந்த விடயம் கவலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த தாக்குதல் இங்கு வாழ்வோரின் இதயத்தை பிரதிபலிப்பதில்லை, இங்குள்ளவர்கள் இனவெறுப்புக்கு எதிரானவர்கள் என புலம்பெயர்தல் ஆதரவு அமைப்பு ஒன்றின் தலைவரான Yvonne Gallant என்பவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அந்த தாக்குதலைக் கண்ணால் பார்த்தவர்கள் சாட்சியமளிக்க முன்வருமாறு காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.