சரத் பொன்சேகாவை போர்த்துக்கல்லுக்கு அனுப்ப வேண்டி வரும் - விக்னேஸ்வரன் பதிலடி



ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை போர்த்துக்கல்லுக்கு அனுப்ப வேண்டி வரும் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

அண்மையில் சரத் பொன்சேகா வெளியிட்ட கருத்திற்கு பதிலளிக்கும் வகையில் நேற்றையதினம் (16) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் பதில் வழங்கிய அவர், எங்களை லண்டனுக்கு போகச் சொன்னால் அவரை நாங்கள் போத்துக்கல்லுக்கு அனுப்ப வேண்டி வரும்.

பொன்சேகா என்பது சிங்கள பெயருமல்ல - தமிழ் பெயருமல்ல. அவரை போத்துக்கல்லுக்கு அனுப்ப வேண்டி வரும்.

சமஷ்டி கோருபவர்களை லண்டன் போகச் சொன்னால் நாங்கள் அவரை போர்த்துக்கல்லுக்கு போகுமாறு கோர வேண்டி வரும் என அவர் தெரிவித்தார்.