சித்தார்த்தன் எம்.பியை ஏன் பெயரிடவில்லை - சஜித் பிரேமதாச!

அரசியலமைப்பு பேரவைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு பரிந்துரை செய்துள்ள சித்தார்த்தன் எம்.பியை இதுவரை பெயரிடாமல் இருப்பது குறித்து எதிர்க்கட்சி தலைவர் சபையில் கேள்வியெழுப்பியுள்ளார். அவரது பெயரை உள்வாங்காமல் இருப்பது வடகிழக்கு மக்களுக்கு மோசமான முன்மாதிரியாக அமைந்துவிடும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை விசேட கூற்றொன்றை முன்வைத்து கருத்து தெரிவிக்கும் போதே சஜித் பிரேமதாச இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.அரசியலமைப்பு பேரவைக்கு 9 பேரே இதுவரை நியமிக்கப்பட்டுள்ள நிலையில் சித்தார்த்தன் எம்,பியை பெயரிட நடவடிக்கை எடுக்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.