பிரித்தானியாவின் அடுத்த பிரதமர் யார்?-முடிவு நாளை!

பிரித்தானியாவின் அடுத்த பிரதமர் யார் என்ற முடிவு நாளை மறுநாள்(5) அறிவிக்கப்படவுள்ளது.இதற்கமைய வெளியுறவுச் செயலாளர் லிஸ் டிரஸ் புதிய பிரதமராக பதவியேற்கவுள்ளதாக கூறப்படுகிறது.

புதிய பிரதமரை தெரிவு செய்வதற்காக ஆளும் கன்சர்வேடிவ் கட்சிக்குள் நடைபெற்ற தேர்தல் நிறைவடைந்துள்ளது.இந்த தேர்தலில் இந்த கட்சியை சேர்ந்த சுமார் 2 இலட்சம் உறுப்பினர்கள் வாக்களித்தனர்.பிரித்தானிய பிரதமருக்கான போட்டியில் லிஸ் டிரஸ், இந்திய வம்சாவளி ரிஷி சுனிக் இடையே போட்டி நிலவியது.இந்தநிலையில் புதிய பிரதமர் யார் என்பது குறித்து நாளை மறுநாள் இரவு 12.30 மணியளவில் பிரித்தானிய மகாராணி 2ஆம் எலிசபெத் முறைப்படி அறிவிக்கவுள்ளார்.