கெஹலிய அனுமதிக்கப்பட்டுள்ள வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலை நிரம்பி வழியும் அவலம்..!

வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்றுவரும் கைதிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது.

சிறைச்சாலை வைத்தியசாலையில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறும் கைதிகளுக்கு 185 படுக்கைகள் உள்ளதாகவும், ஆனால் தற்போது 344 கைதிகள் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருவதாகவும் சிறைச்சாலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஹேமந்த ரணசிங்க தெரிவித்தார்.

இவர்களில் 54 சிக்குன் குனியா நோயாளர்கள் இருப்பதாக பணிப்பாளர் குறிப்பிட்டார்.

வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் ஐந்து வார்டுகள் மற்றும் 61 மருத்துவ நோயாளிகள், 62 உடல் நோயாளிகள், 82 தொற்று நோயாளிகள், 110 மன நோயாளிகள் மற்றும் 29 காசநோயாளிகள் தற்போது உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாடு முழுவதும் முப்பது சிறைகள் உள்ளன, ஒவ்வொரு சிறைக்கும் தனி வைத்தியசாலை உள்ளது. அவர்களில் வெலிக்கடை பிரதான சிறைச்சாலை வைத்தியசாலையில் மாத்திரமே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் சுற்றாடல் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவும் இந்த சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.