அம்பாறை, அறுகம் குடா கடற்கரையில் வெளிநாட்டு பெண் ஒருவர் மேலாடையின்றி நிர்வாணமாக நடந்த சம்பவத்தில் புதிய திருப்புமுனை ஏற்பட்டுள்ளது.
26 வயதான தாய்லாந்து சுற்றுலாப் பயணிக்கு, அநாகரிகமான நடத்தை மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் குற்றத்தை ஒப்புக்கொண்ட பின்னர், பொத்துவில் நீதிமன்றம் அவருக்கு ஒத்திவைக்கப்பட்ட ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.
பிரபலமான கடற்கரை நகரத்தில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அருகில் சுற்றுலாப் பயணி மேலாடையின்றி அரைநிர்வாணமாக நடப்பதைக் காட்டும் படங்கள் சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து, இந்த வார தொடக்கத்தில் ஒரு பெண் என அடையாளம் காணப்பட்ட வெளிநாட்டவர் கைது செய்யப்பட்டார்.
இருப்பினும், இதில் ஒரு புதிய திருப்பம் வெளிவந்துள்ளது.
இணையத்தில் பகிரப்பட்ட குறித்த தாய்லாந்து நாட்டவரின் கடவுச்சீட்டு நகலில், பாலினம் ஆண் என்றும் மிஸ்டர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் பத்திரிகையாளர் ரங்கா ஸ்ரீலால் ஒரு ட்வீட்டில் சட்ட தெளிவின்மையை சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை சட்டம் தற்போது ஆண்-பெண் இருமைக்கு அப்பாற்பட்ட பாலின அடையாளங்களை அங்கீகரிக்கவில்லை,
மேலும் ஆண்கள் பொது இடத்தில் சட்டை அணியாமல் நடந்து கொள்வதை குற்றமாகக் கருதவில்லை. எனவே, நீதிமன்றத்தின் தீர்ப்பு, வெளிநாட்டு குடிமக்கள், குறிப்பாக திருநங்கைகள் சம்பந்தப்பட்ட சட்ட நடவடிக்கைகளில் பாலினம் எவ்வாறு விளக்கப்படுகிறது என்பது குறித்த கவலைகளை எழுப்பியுள்ளன.
இந்த சம்பவம் தனிநபருக்கும் ஒரு நண்பருக்கும் இடையிலான தனிப்பட்ட பிரச்சினையிலிருந்து உருவானது என்றும், பொலிஸார் தெரிவித்திருந்தனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.