பஞ்சாப் சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு இன்று!

பஞ்சாப் சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரே கட்டமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதுடன் தோ்தலில் பதிவாகும் வாக்குகள் மாா்ச் 10ம் திகதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.கொரோனா தொற்று பரவலைக் கருத்திற்கொண்டு வாக்காளா்கள் அனைவருக்கும் கையுறைகள் வழங்கப்படவுள்ளன. வாக்குச்சாவடிகளில் வாக்காளா்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.