காசாவில் இஸ்ரேலின் உக்கிர தாக்குதல்கள் தொடரும் நிலையில், அங்கு அனைத்து போர் விதிகளும் மீறப்பட்டிருப்பதாக பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. நிறுவனத்தின் ஆணையாளர் நாயகம் பிலிப்பே லசரினி சாடியுள்ளார்.
கடந்த ஒக்டோர் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீதான பலஸ்தீன போராளிகளின் தாக்குதலைத் தொடர்ந்து ஆரம்பமான இந்தப் போரில் அண்மைய தினங்களாக இஸ்ரேலியப் படை பலஸ்தீனர்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் ஐ.நாவினால் நடத்தப்படும் பாடசாலைகள் மற்றும் நிலையங்கள் மீது தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது.
இவ்வாறான தாக்குதல்கள் கிட்டத்தட்ட தினசரி இடம்பெறுவதாக குறிப்பிட்டிருக்கும் லசரினி, ‘பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. நிறுவனத்தின் ஆறு பாடசாலைகள் உட்பட, கடந்த 10 நாட்களில் குறைந்தது எட்டு பாடசாலைகள் தாக்கப்பட்டுள்ளன’ என்று எக்ஸ் சமூகதளத்தில் பதிவிட்டுள்ளார்.
‘இந்தப் போர் காசாவில் உள்ள சிறுவர்கள் மற்றும் சிறுமிகளின் குழந்தைப் பருவம் மற்றும் கல்வியை பறித்துள்ளது. பாடசாலைகள் இலக்காகக் கூடாது’ என்று வலியுறுத்திய அவர், ‘காசாவில் அனைத்து போர் விதிகளும் மீறப்பட்டுள்ளது’ என்றார்.
எனினும் காசாவில் இஸ்ரேல் 286 ஆவது நாளாக நேற்றைய தினத்திலும் தனது கடுமையான தாக்குதல்களை தொடர்ந்தது. மத்திய காசாவில் இஸ்ரேலியப் படை நடத்திய செல் குண்டு தாக்குதல்களில் ஏழு பேர் கொல்லப்பட்டு மேலும் பலர் காயமடைந்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதில் அல் சாவியா சிறு நகரில் உள்ள வீடு ஒன்றை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் ஆறு பேர் கொல்லப்பட்டிருப்பதாக மருத்துவ வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது. அல் நுசைர் அகதி முகாமில் இருக்கும் அப்துல் அசாம் பள்ளிவாசல் மீது இடம்பெற்ற மற்றொரு தாக்குதலில் மேலும் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். அல் புரைஜ் அகதி முகாமில் வீடு ஒன்றின் மீது நேற்றுக் காலை இடம்பெற்ற தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டு மேலும் 7 பேர் காயமடைந்திருப்பதோடு 4 சிறுவர்கள் காணாமல்போயிருப்பதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டுள்ளது.
தவிர இஸ்ரேலியப் படை தெற்கு நகரான கான் யூனிஸின் கிழக்கு பகுதியிலும் ரபா நகரின் கிழக்கு பகுதியிலும் வீடுகள் மீது குண்டுகளை வீசியதாக செய்தி வெளியாகியுள்ளது.
ரபா நகரில் மேற்கு பக்கத்தில் ஆழ ஊடுருவும் இஸ்ரேலிய டாங்கிகள் மேட்டு நிலம் ஒன்றில் நிலைகொண்டிருப்பதாக அங்குள்ள குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். அங்கு பல சுரங்கப்பாதைகளை கண்டுபிடித்ததாகவும் பல துப்பாக்கிதாரிகளை கொன்றதாகவும் இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த ஒக்டோர் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீதான பலஸ்தீன போராளிகளின் தாக்குதலைத் தொடர்ந்து ஆரம்பமான இந்தப் போரில் அண்மைய தினங்களாக இஸ்ரேலியப் படை பலஸ்தீனர்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் ஐ.நாவினால் நடத்தப்படும் பாடசாலைகள் மற்றும் நிலையங்கள் மீது தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது.
இவ்வாறான தாக்குதல்கள் கிட்டத்தட்ட தினசரி இடம்பெறுவதாக குறிப்பிட்டிருக்கும் லசரினி, ‘பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. நிறுவனத்தின் ஆறு பாடசாலைகள் உட்பட, கடந்த 10 நாட்களில் குறைந்தது எட்டு பாடசாலைகள் தாக்கப்பட்டுள்ளன’ என்று எக்ஸ் சமூகதளத்தில் பதிவிட்டுள்ளார்.
‘இந்தப் போர் காசாவில் உள்ள சிறுவர்கள் மற்றும் சிறுமிகளின் குழந்தைப் பருவம் மற்றும் கல்வியை பறித்துள்ளது. பாடசாலைகள் இலக்காகக் கூடாது’ என்று வலியுறுத்திய அவர், ‘காசாவில் அனைத்து போர் விதிகளும் மீறப்பட்டுள்ளது’ என்றார்.
எனினும் காசாவில் இஸ்ரேல் 286 ஆவது நாளாக நேற்றைய தினத்திலும் தனது கடுமையான தாக்குதல்களை தொடர்ந்தது. மத்திய காசாவில் இஸ்ரேலியப் படை நடத்திய செல் குண்டு தாக்குதல்களில் ஏழு பேர் கொல்லப்பட்டு மேலும் பலர் காயமடைந்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதில் அல் சாவியா சிறு நகரில் உள்ள வீடு ஒன்றை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் ஆறு பேர் கொல்லப்பட்டிருப்பதாக மருத்துவ வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது. அல் நுசைர் அகதி முகாமில் இருக்கும் அப்துல் அசாம் பள்ளிவாசல் மீது இடம்பெற்ற மற்றொரு தாக்குதலில் மேலும் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். அல் புரைஜ் அகதி முகாமில் வீடு ஒன்றின் மீது நேற்றுக் காலை இடம்பெற்ற தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டு மேலும் 7 பேர் காயமடைந்திருப்பதோடு 4 சிறுவர்கள் காணாமல்போயிருப்பதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டுள்ளது.
தவிர இஸ்ரேலியப் படை தெற்கு நகரான கான் யூனிஸின் கிழக்கு பகுதியிலும் ரபா நகரின் கிழக்கு பகுதியிலும் வீடுகள் மீது குண்டுகளை வீசியதாக செய்தி வெளியாகியுள்ளது.
ரபா நகரில் மேற்கு பக்கத்தில் ஆழ ஊடுருவும் இஸ்ரேலிய டாங்கிகள் மேட்டு நிலம் ஒன்றில் நிலைகொண்டிருப்பதாக அங்குள்ள குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். அங்கு பல சுரங்கப்பாதைகளை கண்டுபிடித்ததாகவும் பல துப்பாக்கிதாரிகளை கொன்றதாகவும் இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.