மீண்டும் ரசிகர்களை களத்தில் இறக்கிவிடும் விஜய்

தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தில் சேர்ந்த 169 பேர் போட்டியிட்டார்கள்.அதில் 100 பேர் வெற்றி பெற்றார்கள். அதன் பிறகு வெற்றி பெற்ற விஜய் ரசிகர், மன்றத்தினர் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.அதோடு ஊரக  உள்ளாட்சி தேர்தலில் விஜய் ரசிகர்கள் அதிகமான பேர் வெற்றி பெற்றது சில அரசியல் கட்சிகளுக்கு அதிர்ச்சி.இந்நிலையில் அடுத்த மாதம் தமிழகத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற  உள்ளாட்சி தேர்தலிலும் விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டிஇடுவதற்கு அனுமதி கொடுத்திருக்கிறார் விஜய் குறிப்பாக மாநகராட்சி மேயர் பதவிகளுக்கும் விஜய் ரசிகர்கள் போட்டியிடப் போகிறார்கள். ஊரக  உள்ளாட்சி தேர்தலில் அதிகப்படியான தொகுதிகளில் வெற்றி பெற்றதால் விஜய் மக்கள் இயக்கத்தினர் மீது எதிர்ப்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.