விஜயகாந்த் மறைவு கேள்விப்பட்டு வடிவேலு அனுபவித்த வேதனை- 1 நாள் முழுவதும் அவர், நடிகரின் நண்பர் பேச்சு

தமிழ் சினிமாவில் ஒருசில பிரபலங்களை எப்போதும் மக்களால் மறக்கவே முடியாது, அப்படிபட்ட பிரபலம் தான் விஜயகாந்த்.

சினிமாவிலும், அரசியலிலும் தனக்கு என்ற ஒரு இடத்தை பிடித்துள்ளவர் உடல்நலக் குறைவால் கடந்த சில வருடங்களாக வீட்டிலேயே முடங்கி போனார். சிகிச்சை எடுத்துக்கொண்டு வந்த விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28ம் தேதி உயிரிழந்தார்.

அவரின் இறப்பு செய்தி கேட்டு பிரபலங்களும், தொண்டர்களும் கடும் துக்கத்தில் ஆழ்ந்தார்கள்.

சூர்யா, கார்த்தி, சிவகுமார், சரத்குமார், அருண் விஜய் போன்ற பிரபலங்கள் தற்போது விஜயகாந்த் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

விஜய், சூர்யா போல் பல நடிகர்களின் வாழ்க்கையில் விஜயகாந்த் பெரிய பாதையை அமைத்து தந்துள்ளார். அதேபோல் வடிவேலு சினிமா பயணத்திற்கு விஜயகாந்த் ஒரு முக்கிய பங்காக இருந்துள்ளார்.

ஆனால் அவர் இறப்பிற்கு வடிவேலு ஒரு அறிக்கை கூட விடவில்லை என்பது ரசிகர்களின் பெரிய வருத்தமாக உள்ளது.

வடிவேலுவின் நண்பரும், விசிக நிர்வாகியுமான மாலின் ஒரு பேட்டியில், விஜயகாந்த் மறைவால் வடிவேலு அழுதது தனக்குத் தெரியும் என்றும் நேரில் சென்றால் அசம்பாவிதங்கள் ஏற்படும் என்பதாலேயே அவர் செல்லவில்லையே தவிர மற்றபடி எந்தக் காரணமும் இல்லை என பேசியுள்ளார்.