இந்தியாவின் பாதுகாப்பு திறனை மேம்படுத்துவதாக அமெரிக்கா உறுதி!

இந்தியாவின் பாதுகாப்பு திறனை மேம்படுத்த அமெரிக்கா உறுதி பூண்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவு இணையமைச்சர் டொனால்டு லூ கூறியுள்ளார்.இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், ‘சீனா அமெரிக்காவை சீண்டுவதுபோல், இந்தியாவையும், ஒவ்வொரு விடயத்திலும் சீண்டி வருகிறது.இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்தியாவின் பாதுகாப்பு திறனை மேலும் வலுப்படுத்த அமெரிக்கா உறுதி பூண்டுள்ளது.இதற்காக கடற்படை கூட்டுப் பயிற்சி, உளவுத் தகவல்களை பரிமாறிக் கொள்வது போன்றவற்றுடன் விண்வெளி, சைபர் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல துறைகளில் இந்தியா உடனான உறவு மேலும் வலுப்படுத்தப்படும். இதற்கான பேச்சு நடந்து வருகிறது’ எனத் தெரிவித்துள்ளார்.