நேரடி தாக்குதலில் களமிறங்கிய அமெரிக்கா! களமுனையில் பதற்றம்


ஈரானிய பயங்கரவாத இயக்கமான ஹிஸ்புல்லாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தாக்குதலை அமெரிக்க இராணுவம் மேற்கொண்டுள்ளது.

திங்கட்கிழமை, ஹிஸ்புல்லா நடத்திய தாக்குதலில் அமெரிக்க பணியாளர்கள் மூவர் படுகாயமடைந்ததைத் தொடர்ந்து அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவு பிறப்பித்தார்.

ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள அமெரிக்க பணியாளர்கள் மீது ஹிஸ்புல்லா மற்றும் தொடர்புடைய இயக்கங்கள் நடத்திய தொடர் தாக்குதலுக்காகவும் ஈர்பிள் விமான தளத்தில் அமெரிக்க பணியாளர்கள் மீது நடந்த தாக்குதலுக்காகவும் பதிலடியாக இதனை மேற்கொள்வதாக பாதுகாப்பு செயலர் லாய்ட் ஆஸ்டின் தெரிவித்துள்ளார்.

செவ்வாய்கிழமை, ஈராக்கில் அதிகாலை 4.45-க்கு ஹிஸ்புல்லா சார்புடைய மூன்று இடங்களில் அமெரிக்க ராணுவம் குண்டுவீசியது.

சிரியாவில் அமெரிக்க படைகள், ஈராக் மற்றும் நூற்றுக்கணக்கில் நிலைகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.