உக்ரைன் மீது ரஷ்யா போர் ஆரம்பித்துள்ள நிலையில் மோடி அமைச்சர்களுடன் அவசர ஆலோசனை!

உக்ரைன் மீது ரஷ்யா போரினை ஆரம்பித்துள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அமைச்சர்களுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இதன்போது உக்ரைனில் தங்கியுள்ள இந்தியர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.ஏற்கானவே 200இற்கும் மேற்பட்ட இந்தியர்கள் நாடு திரும்பியுள்ள நிலையில், எஞ்சியுள்ளவர்களை மீட்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.