கருக்கலைப்பு சட்டத்திற்கு அனுமதி வழங்கி ஐக்கிய அரபு இராஜியம்

கருக்கலைப்பு சட்டத்திற்கு அனுமதி வழங்கி ஐக்கிய அரபு இராஜியத்தின் அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


 குறிப்பாக பாலியல் துஸ்பிரயோக சம்பவங்களில் பாதிக்கப்பட்ட பெண்கள் கருக்கலைப்பு செய்து கொள்ள அனுமதி அளிக்கும் சட்டத்திற்கு ஐக்கிய அரபு இராஜியத்தின் அமைச்சரவை  ஒப்புதல் அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
 
பாலியல் துஷ்பிரயோக சம்பவம் தொடர்பாக உடனடியாக முறைப்பாடு செய்ய வேண்டும் எனவும், கர்ப்பமாகி 120 நாட்களுக்குள் கருக்கலைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் இந்த சட்டம் கூறுகிறது.

கட்டாய பாலியல் உறவுக்கு ஆளாகி கர்ப்பமான பெண்கள் மற்றும் குடும்ப உறுப்பினரால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு கர்ப்பமான பெண்கள் ஆகியோருக்கும் இந்த சட்டம் பொருந்தும் என கூறப்பட்டுள்ளது.