பஞ்சாப் மாநில நீதிமன்றத்தில் வெடிவிபத்து-இருவர் பலி!

பஞ்சாப் மாநில நீதிமன்றத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள கீழமை நீதிமன்றத்தில் இன்று காலை திடீரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த நிலையில், இந்த வெடி விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், 20க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இதையடுத்து அந்த மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதுடன், விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.