எகிப்தில் இருந்து இந்தியாவுக்கு சரக்குகளை ஏற்றிச் சென்ற கப்பலில் பணிபுரிந்த இரண்டு கப்பல் பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
இவர்கள் சர்வதேச கடலில் உயிரிழந்துள்ளதாக நேற்று கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம் காலி துறைமுக காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
உயிரிழந்த இருவரும் 41 மற்றும் 53 வயதுடைய யுக்ரைன் பிரஜைகள் எனத் தெரியவந்துள்ளது.
தற்போது குறித்த கப்பல் காலி துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் இன்று (2) காலி நீதவானுக்கு அறிக்கையிடவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.