பிரான்ஸின் அடுக்குமாடி கட்டடத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் இரண்டு உடல்கள் கண்டெடுப்பு-6 பேரை காணவில்லை!

பிரான்ஸின் தெற்குப் பகுதியில் உள்ள மார்செய்லி நகரில் உள்ள நான்கு மாடி அடுக்குமாடி கட்டடத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் இரண்டு உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.6 பேரை காணவில்லை என்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரப்படி 00:49 மணிக்கு லா ப்ளைன் சுற்றுப்புறத்தில் வெடிப்பு ஏற்பட்டது.வெடிப்புக்கான காரணம் தெளிவாக இல்லை ஆனால் ஆய்வாளர்கள் வாயு கசிவுக்கான சாத்தியத்தை ஆராய்ந்து வருகின்றனர்.

இந்த வெடிவிபத்தில் அண்டை கட்டடங்களைச் சேர்ந்த 5 பேர் சிறு காயங்களுக்கு உள்ளாகினர் மற்றும் சுமார் 200 பேர் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.ஞாயிற்றுக்கிழமை முழுவதும் இடிபாடுகளுக்கு அடியில் எரிந்த தீயை அணைக்க சுமார் 100 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்குச் சென்றனர்.