பங்களாதேஷ் பயணி ஒருவரிடமிருந்து பணம் திருடிய இருவர் கைது!

பங்களாதேஷ் பயணி ஒருவரிடமிருந்து 1200 அமெரிக்க டொலர்களை திருடிய இருவரை வெலிகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.பங்களாதேஷ் பெண்ணொருவர் மிரிஸ்ஸவிலுள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்ததாகவும் இதன்போதே அவரது பணம் திருடப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.சந்தேகநபர்கள் தெனிப்பிட்டிய மற்றும் மிரிஸ்ஸ பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும், சந்தேக நபர்கள் மாத்தறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.