யாழில் ஆமை இறைச்சியுடன் சிக்கிய நபர்!

யாழ்பாணம் பாசையூர் பகுதியில் ஆமை இறைச்சியுடன் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டார்.

யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த ரகசிய தகவலில் கைது முன்னெடுக்கப்பட்டது.

6 கிலோ 55 கிராம் நிறையுடைய ஆமை இறைச்சி சந்தேக நபரிடம் இருந்து மீட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

சந்தேக நபரும் கைப்பற்றப்பட்ட இறைச்சியும் யாழ்ப்பாண காவல்துறை நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.