நடிகை திரிஷாவுக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் கொரோனா தொற்று வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை தற்போது 9 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.இந்த நிலையில் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையான திரிஷாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனை பற்றி திரிஷா தனது டுவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார். புத்தாண்டுக்கு சற்று முன்பு எனக்கு கொரோனா தொற்று உறுதியானது. எனக்கு அறிகுறிகள் இருந்தன. தடுப்பூசி எடுத்து கொண்டதால் பெரிதாக பாதிப்பு எதுவும் இல்லை. நான் குணமடைந்து நன்றாக இருப்பதாக  உணர்கிறேன். தயவு செய்து அனைவரும் முகக்கவசம் அணியுங்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ளுங்கள். நான் விரைவில் குணமடைந்து வீடு செல்வேன் என நம்பிக்கை உள்ளது. நான் நலம் பெற வேண்டும் என பிராத்தனை செய்யும் நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் என பதிவிட்டுள்ளார்.