முதல் மாவீரர் சங்கருக்கு ஈகைச்சுடரேற்றி அஞ்சலி

புதிய இணைப்பு

மாவீரா் நாளான இன்று முதலாவது கரும்புலி மாவீரா் மில்லாின் நினைவாக நெல்லியடி மத்திய கல்லூரியின் முன்பாக நினைவேந்தல் இடம்பெற்றுள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினா் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையிலான குழுவினா் இந்த நினைவேந்தலை மேற்கொண்டனா். இதன்போது மாவீரா்கள் நினைவாக ஈகை சுடரேற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.


முதலாம் இணைப்பு

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முதல் மாவீரர் சங்கர் என அழைக்கப்படும் சத்தியநாதனுக்கு ஈகைச்சுடரேற்றி இன்று அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறையிலுள்ள அவரது இல்லத்திற்கு முன்பாக ஈகைச்சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன்போது மாவீரரின் தாயார், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினர் க.சதீஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சுடரேற்றி அகவணக்கம் செலுத்தி அஞ்சலி செலுத்தினர்.

விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு தமது உயிரை போராட்டக்களத்தில் தியாகம் செய்தவர்கள் நினைவாக, கார்த்திகை 27 ஆம் திகதி, மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கோப்பாய் துயிலுமில்லத்திலும் சிவாஜிலிங்கத்தால் மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டது.