அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்திய வாள்வெட்டு கும்பல் - யாழ். நவாலியில் பரபரப்பு



யாழ்ப்பாணம் நவாலி பகுதியில் வாள்வெட்டு கும்பல் தாக்குதல் நடத்தியதில் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்று இரவு 9.40 மணியளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவாலி வடக்கு திருச்சபை வீதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த வாள்வெட்டு கும்பல் தாக்குதல் நடத்தியதில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்