தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணித்தலைவி வாசுகி சுதாகர் உட்பட மூவர் கைது..!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணித்தலைவி வாசுகி சுதாகர் உட்பட மூவர் சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மருதங்கேணியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக கிளிநொச்சி காவல் நிலையத்திற்கு வருகை தருமாறு கட்சியின் மகளீர் அணித் தலைவி வாசுகி சுதாகர், யாழ் மாவட்ட அமைப்பாளர் தீபன் திலீசன், மகளீர் அணி செயற்பாட்டாளர் கிருபா கிரிதரன் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து இன்று கிளிநொச்சி காவல்நிலையத்திற்கு சென்ற மூவரும் விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.