இந்தியாவில் 15-18 வயது சிறுவர்களுக்கு மூன்றரை கோடி டோஸ் தடுப்பூசி!

இந்தியாவில் 15 தொடக்கம் 18 வயதுடைய சிறுவர்களுக்கு இதுவரை மூன்றரை கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் பெரியவர்களை விட சிறுவர்கள் ஆர்வமாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இதன்படி நேற்று மாத்திரம் 39 இலட்சம் டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாகவும், ஒட்டுமொத்தமாக 157 கோடியே 20 இலட்சம் டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை கடந்த 3ம் தகிதி முதல் சிறுவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.