புலம்பெயர் நாடுகளில் தியாகி திலீபனின் 36 ஆவது ஆண்டு நினைவேந்தல்

தியாகி திலீபனின் 36 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று மாலை புலம்பெயர் நாடுகளில் இடம்பெற்ற நிலையில் மக்கள் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

டென்மார்கில் கோர்சன்ஸ் மற்றும் கொல்பேக் நகரங்களில் எழுச்சியுடன் தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று இடம்பெற்றிருந்தன.

இந்த நிகழ்வில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டதை தொடர்ந்து தியாக தீபம் திலீபனின் திருவுருவப் படத்திற்கு ஈகைச் சுடறேற்றி மலர்வணக்கம் செலுத்தப்பட்டிருந்தன.

கோர்சன்ஸில் நடைபெற்ற நிகழ்வில் மாலதி தமிழ்க் கலைக்கூட மாணவர்களின் கலைநிகழ்சிகளும் சிறப்புரைகளும் இடம்பெற்றன.

அத்துடன் தியாகி திலீபனின் 36 ஆவது ஆண்டு நினைவு தினம் இத்தாலி பலெர்மோ நகரத்திலும் இடம்பெற்றுள்ளது. இதன்போது திலீபனின் திருவுருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

மேலும் சுவிஸ்லாந்திலும் தியாகி திலிபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வு பூர்வமாக இடம்பெற்றுள்ளன.