பிரித்தானியாவுக்கு வரும் உக்ரைன் அகதிகளின் எண்ணிக்கைக்கு வரம்பு இல்லை!

உக்ரைன் அகதிகள் தங்கள் மிகப்பெரிய தேவையை எதிர்கொள்வதால் பிரித்தானியாவுக்கு வரக்கூடிய உக்ரைன் அகதிகளின் எண்ணிக்கைக்கு வரம்பு இல்லை என்று வீட்டுவசதி மற்றும் சமூகங்கள் செயலர் மைக்கேல் கோவ், நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளார்.ரஷ்யாவின் படையெடுப்பில் இருந்து தப்பியோடுபவர்களுக்கு பிரித்தானியாவின் புதிய அணுசரணை திட்டத்தின் விபரங்களை அறிவித்த கோவ், பல பிரித்தானியர்கள் தங்கள் வீடுகளைத் திறந்து உக்ரைனிய அகதிகளை ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.புதிய திட்டம், பிரித்தானிய பொதுமக்களின் மகத்தான நல்லெண்ணம் மற்றும் தாராள மனப்பான்மை மற்றும் மிகவும் தேவைப்படும் நேரத்தில் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு ஆதரவளிக்கும் எங்கள் பெருமைமிக்க வரலாற்றின் அடிப்படையிலானது என்று கோவ் கூறினார்.திங்கட்கிழமை இரவு 9.30 மணி நிலவரப்படி, உக்ரைனியர்களுக்கு தங்கள் வீடுகளை வழங்க 43,000 பேர் ஏற்கனவே கையெழுத்திட்டுள்ளனர் என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.திங்கட்கிழமை மதியம் இணையதளம் நேரலைக்கு வந்த முதல் ஒரு மணி நேரத்திற்குள் 1,500பேர் ஆதரவை வழங்க பதிவு செய்தனர்.