பொங்கலுக்கு பிறகு தியேட்டர்கள் மூடப்படுமா?

கொரோனா தொற்றின் காரணமாக போன 2 வருடங்களிலும் சில மாதங்கள் மூடப்பட்டன. சில மாதங்கள் 50 சதவீத இருக்கை என கூட நடத்தப்பட்டன. தற்போது ஒமிக்ரான்  வடிவத்தில் கொரோனா மூன்றாவது அலை அடுத்த வருடம் ஜனவரி அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்ப்பாக்கப்படுகின்றது. கடந்த வாரம் முதல் இந்தியாவில்   ஒமிக்ரான்  தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகின்றது. டெல்லியில் தியேட்டர்கள் முழுவதும் மூடப்பட்டுவிட்டது. கர்நாடகாவிலும் , கேரளாவிலும் 50 சதவீத இருக்கைகளுடன் மட்டுமே அனுமதிவழங்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது ஒமிக்ரான்  தாக்கம் அதிகரிப்பதால்  தியேட்டர்கள் முழுமையாகவும் மூடவாய்ப்புள்ளது.

தமிழ்லகத்தில் பொறுத்தவரை நாளை டிசம்பர் 31 முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. அதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தெரிகிறது.