யாழில் பிரபல நகை கடை உரிமையாளரின் மனைவி புலனாய்வு பிரிவினரால் அதிரடிக் கைது

யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல நகை கடை உரிமையாளரின் மனைவி 80 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனைக்கோட்டை பழம் வீதி பகுதியில் நீண்ட காலமாக ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த 36 வயது டைய பெண் ஒருவர் இன்றைய தினம்(04.08.2023) யாழ்ப்பாண மாவட்டபொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பெண்ணிடமிருந்து 80மில்லி கிராம் ஹெரோயின் போதை பொருள் மீட்கப்பட்டுள்ளதாக மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன.

கைது செய்யப்பட்ட பெண் விசாரணைகளின் பின் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.