இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் உயர்ந்தது! மத்திய வங்கியின் தகவல்


அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.

இதன்படி, கடந்த சில நாட்களாக அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று  அதிகரித்து வரும் நிலையில், நேற்றுடன் ஒப்பிடும் போது இன்றையதினம் ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரித்துள்ளதாக  மத்திய வங்கி வெளியிட்டுள்ள தரவுகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 328.60 ரூபாவாகவும், கொள்வனவு விலை 311.26 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இந்தநிலையில் நேற்றுடன் ஒப்பிடும்போது ஸ்டெர்லிங் பவுண்டிற்கு எதிராக ரூபாவின் மதிப்பிலும் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

எனினும்,  நேற்றுடன் ஒப்பிடும் போது,  யூரோவுக்கு எதிராக ரூபாவின் பெறுமதியி சிறு வீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன், பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் மதிப்பு உயர்ந்துள்ளது.

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 358.15 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 338.28 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 404.24 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 382.18 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.