மாணவிகள் முன் நிர்வாணமாக நின்ற ஆசிரியையின் கணவன் - மடக்கிப் பிடித்த காவல்துறை


ஆசிரியையின் கணவரின் அநாகரிக செயலை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

மொனராகலை அதிமலே பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த பிரதேசத்தில் உள்ள பாடசாலையில் தரம் 5 இல் கல்வி கற்கும் நான்கு சிறுமிகள் முன் அவர் நிர்வாணமாக நின்றதாக காவல்துறையினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

சிறுமிகள் முன்னிலையில் நிர்வாணமாக நின்று பாலியல் வன்கொடுமை புரிந்த குற்றச்சாட்டின் பேரில் 32 வயதான குறித்த நபரைக் கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் அதிமலே காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.