அம்பாறையில் இஸ்ரேலியர்கள் மறைமுகமாக முன்னெடுக்கும் நாசகார செயல் அம்பலம் : தடுமாறும் அதிகாரிகள்



சுற்றுலாப் பயணிகளாக இலங்கை வரும்  சில இஸ்ரேலியர்கள் கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகளில் அவர்கள் நடத்தும் சட்ட அனுமதியற்ற வர்த்தக நிறுவனங்களில் பல்வேறு வகையான போதைப் பொருட்களை விற்பனை செய்வதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அவர்களின் இந்தச் செயல்கள் பொதுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக சுற்றுலா அதிகாரிகளுடன் பகிர்ந்து கொள்ளப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

சில வெளிநாட்டினர் இரவு விடுதிகள் மற்றும் விருந்தினர் இல்லங்கள் போன்ற வணிக முயற்சிகளை நிறுவியுள்ளனர். இஸ்ரேலியர்களின் இலங்கை சகாக்களின் பெயர்களில் இவை இயங்குகின்றன.

சட்ட விதிமுறைகளைத் தவிர்ப்பதற்கான ஒரு மறைப்பாக உள்ளூர்வாசிகள் இதில் ஈடுபட்டுள்ளனர். கிழக்கு கடற்கரையில் உள்ள அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் பிரிவில் உள்ள அருகம்பை உல்லா கோமாரி மற்றும் பனாமா போன்ற பகுதிகளிலிருந்து வழக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த வெளிநாட்டினர் தங்கள் சேவைகளை மற்ற சக சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்குகிறார்கள். மேலும் ஈட்டப்படும் வருமானம் உண்டியல் போன்ற கட்டுப்பாடற்ற பணப்பரிமாற்ற முறைகள் மூலம் தாய் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படுகிறது. இதன் விளைவாக இலங்கைக்கு சுற்றுலாவிலிருந்து முறையான வருவாய் மறுக்கப்படுகிறது.

வட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் போன்ற தளங்களில் உள்ள மூடிய சமூக ஊடகக் குழுக்கள் மூலம் ஒழுங்கமைக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு இந்த இடங்களில் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுகிறது.
 
இது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்டபூர்வமான சுற்றுலா நடைமுறைகள் பாதிப்பு குறித்துகுறித்து கவலைகளை எழுப்புகிறது என சுற்றுலாத்துறை குறித்து நன்கறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த வலையமைப்புகள் டிஜிட்டல் முறையில் இயங்குவதாலும் ஏற்கனவே சுற்றுலாப்பயணிகளாக இருக்கும் வாடிக்கையாளர்களின் நெருக்கமான குழுவிற்கு சேவை செய்வதாலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த வலையமைப்புகளை அகற்றுவது கடினமாக உள்ளதைக் கண்டறிந்துள்ளனர்.

சட்டவிரோதமாக வணிகங்களில் ஈடுபடும் வெளிநாட்டினர் உனவட்டுன மற்றும் வெலிகம போன்ற சுற்றுலாப் பகுதிகளில் இருந்து வருவதாகக் கூறப்படுகிறது.