சீனாவில் அண்மைக்காலமாக தீவிரமடைந்து வரும் கொரோனா பரவல்!

சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 32943 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யபட்டுள்ளது.சீனாவில் அண்மைக் காலமாக கொரோனா பரவல் தீவிரமடைந்து வருகிறது.

இதனையடுத்து, அங்கு கொரோனா பரிசோதனை உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.நேற்று முன்தினம் அதிகபட்சமாக நாடு முழுவதும் 31444 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டதாக தேசிய சுகாதார ஆணையம் அறிவித்தது.

இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் பாதிப்பு எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.அதன்படி புதிதாகி 32943 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யபட்டுள்ளது.இதில் 3103 பேருக்கு அறிகுறிகள் காணப்பட்டதாகவும் எனினும் 29840 பேருக்கு எந்தவித கொரோனா அறிகுறிகளும் காணப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.