தாதியர் சங்கத்தினரால் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த எதிர்ப்பு பேரணி கைவிடப்பட்டது

அகில இலங்கை தாதியர் சங்கத்தினரால் இன்று (திங்கட்கிழமை) கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த எதிர்ப்பு பேரணி கைவிடப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் செயலாளருடன் இன்று பிற்பகல் கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ள நிலையில், அதனைத்தொடர்ந்து பேரணியை முன்னெடுப்பது தொடர்பாக தீர்மானம் எடுக்கப்படும் என அந்தச் சங்கத்தின் செயலாளர் எஸ்.பி.மெதிவத்த தெரிவித்தார்.

தாதியர் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து தாதியர்களுக்கான பட்டம் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட 7 கோரிக்கைகளை முன்வைத்து எதிர்ப்பு பேரணி முன்னெடுக்கப்பட இருந்தமை குறிப்பிடத்தக்கது.