உறவுகளை இழந்த வலி எமக்குத் தான் - வேறு யாருக்குத் தெரியும் ; பேரணியில் பரிதவித்த தாய்!

தமிழர் தாயகம் மீதான சிறிலங்கா படைகளின் போர் நடவடிக்கை காரணமாக ஊர், உடைமை உயிர் என அனைத்தையும் இழந்து தவித்து நிற்கின்றோம் என உறவுகளை இழந்த தாய் ஒருவர், இப்போராட்டம் மூலம் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

கரி நாள் பிரகடனமாக வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய பேரணி இன்று திருகோணமலையை சென்றடைந்துள்ள நிலையில், அங்கு ஊடகங்கள் முன்னிலையில், தாய் ஒருவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், 

உறவுகளை இழந்த எமக்கத் தான் இழப்பின் வலி தெரியும். இத்தனை வருடங்களில் எத்தனை உயிர்களைப் பறிகொடுத்து தவித்து நிற்கின்றோம் என்று யாருக்குத் தெரியும்.

பெற்றவர்களுக்குத் தான் அந்த வலி தெரிம். பிள்ளைகள், கணவன், மனைவி, ஏனைய உறவுகள் என்று பலரை இழந்து நிர்க்கதியில் நிற்கும் எமக்குத் தான் அதன் வலி புரியும்.

நானும் யாழ்ப்பாணத்திலிருந்து யுத்தம் காரணமாக இடம்பெயந்து தான் இங்கு வந்து வாழ்ந்துகொண்டிருக்கின்றேன் எனவும் தனது மன விரக்தியை வெளிப்படுத்தியுள்ளார்.