திடீரென சுகவீனமுற்று விழுந்த தாயார்! அனைவரின் கவனத்தையும் ஈர்த்த சிங்கள பொலிஸ் யுவதியின் செயல்


போராட்டத்தின் போது சுகவீனமுற்ற தாயாருக்கு சிங்கள பொலிஸ் உத்தியோகத்தரொருவர் நீர் பருக்கிய சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 

கிளிநொச்சி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போது தாயொருவர் திடீரென சுகவீனமுற்றுள்ளார். 

இதன்போது உதவி பொலிஸ் பரிசோதகரான இஷானி சுலோசனா குறித்த தாயாருக்கு குடிநீர் வழங்கிய சம்பவமானது காணொளியில் பதிவாகியுள்ளது. 

இதேவேளை சுகவீனமுற்ற குறித்த தாயார் தனது பிள்ளையை நினைத்து கதறியழுதுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.