சற்று முன்னர் பிரதமரை சந்தித்த சர்வதேச நாணய நிதியத்தினர்: ஆரம்பிக்கப்பட்ட பேச்சு வார்த்தை

இலங்கைக்கு வந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் 10 பேர் கொண்டு குழுவிற்கும் பிரதமரும், நிதியமைச்சருமான ரணில் விக்ரமசிங்கவிற்கும் பேச்சுவார்த்தை  ஆரம்பமாகியுள்ளது.

அமெரிக்காவில் நடந்த சந்திப்பு ஏற்கனவே இலங்கை அரசாங்கத்தின் குழு, அமெரிக்காவுக்கு சென்று சர்வதேச நாணய நிதிய அதிகாரிகளுடன் சந்திப்புக்களை நடத்தியிருந்தது.

இதற்கு இந்தியாவும் உதவியிருந்ததமை குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து நாணய சபையின் கோரிக்கையின்படி, இரண்டு ஆலோசனைக்குழுக்களையும் இலங்கை அரசாங்கம் அழைத்துள்ள நிலையிலேயே சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் இலங்கை வந்துள்ளனர்.