விளாடிமீர் புடினுக்கு எதிராக கைது ஆணை பிறப்பித்தது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்!

ரஷ்யா ஜனாதிபதி விளாடிமீர் புடினுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது ஆணையை பிறப்பித்துள்ளது.போர் நடைபெற்று வரும் உக்ரைன் பகுதிகளை ஆக்கிரமித்ததன் மூலம் அங்குள்ள குழந்தைகளை அபகரித்து சென்றதாகவும், சட்டவிரோதமாக நாடு கடத்தலில் ஈடுபட்டதாகவும் புடின் மீது போர் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அதேபோல, ரஷ்யாவின் குழந்தைகள் உரிமைகள் ஆணையர் மரியா அலேக்சியிவ்னா லவோவா, மீதும் இதே குற்றச்சாட்டுக்காக கைது ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.முதல் கட்ட விசாரணையில் இருவர் மீதும் போர் குற்றம் புரிந்ததற்கான முகாந்திரம் உள்ளது என்று சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள புடின், போர் குற்றத்துக்கான கைது ஆணையை பிறப்பித்துள்ளமை தொடர்பில் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.