தமிழ் மக்கள் பயங்கரவாதிகள் என்ற எண்ணப்பாடே தையிட்டியில் அரசின் அராஜகத்திற்கு காரணம் - சரவணபவன் இடித்துரைப்பு



தமிழ் மக்கள் பயங்கரவாதிகள் என்ற எண்ணப்பாடே தையிட்டியில் அரசின் அராஜகத்திற்கு காரணம் என நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்தார்.

தையிட்டி பகுதியில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வர பாதம் சரவணபவன் இன்று மாலை 2 மணியளவில் சம்பவ இடத்திற்கு விரைந்து போராட்டத்தில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உட்பட்ட நால்வருடன் கலந்துரையாடி கட்டப்பட்ட விகாரையினையும் பார்வையிட்டார்.

இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், தையிட்டியில் கட்டப்பட்டு முடியும் கட்டத்தில் உள்ள விகாரையை நேரடியாக பார்வையிட்டேன். நல்லிணக்கத்தை ஏற்படுத்தாத நிகழ்வுகளை தான் இந்த அரசு மேற்கொண்டு கொண்டிருக்கின்றது. போராட்டங்கள் தொடரவேண்டும் .

நான் நாடாளுமன்றத்தில் இருக்கின்ற பொழுது கூறினார்கள் ஆயிரம் விகாரை கட்டப்போகின்றார்கள் என்று ஆனால் அந்த நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில்தான் இவ்வாறான விகாரைகள் திட்டமிட்டு முளைத்துகொண்டு வருகின்றன.

இது சம்பந்தமாக ரணில் பேசப்போகின்றேன் கூப்பிட்டு கதைக்கதான் போகின்றேன் என்று சொல்லிக்கொண்டே இருக்கின்றார் ஆனால் எதைப்பற்றி பேசப்போகின்றார்,

தமிழ் மக்களது பிரச்சினை சம்பந்தமாக பேசப்போகின்றேன் என்று சொன்னவர் தமிழ் மக்களுடைய தீர்க்கப்படகூடிய பிரச்சினைகள் அதிகாரபங்கீடு சம்மந்மானது நேரடியாக பேசிக் கொள்ளலாம்.

தமிழ் மக்களை துன்புறுத்துவது போராட்டம் நடத்த வந்தவர்கள் பொதுமக்கள் இந்த பொதுமக்களை கூட விரட்டியடித்து நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட்ட நால்வரை முள்வேலிக்குள் வைத்து அடைத்து வைத்து உணவு மருந்தும் கொடுக்காது அடைத்து வைத்திருந்தார்கள் .

பின்னர் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் அது சீராகியது இங்கு எதுவுமே தேவையில்லை இது சாதாரண இடம் இதற்கு போய் இவ்வளவு இராணுவம் ஏன் என்று தெரியவில்லை

இங்கு என்ன இருக்கின்றது என்று இவ்வளவு அடாவடி செய்கின்றார்களோ தெரியவில்லை .அவர்களுடைய எண்ணங்களை பாருங்கள் இன்னமும் நாங்கள் பயங்கரவாதிகள் தான் என்ற எண்ணம் தான் அவர்களுக்கு இருக்கின்றது.

தமிழ் மக்களை தொடர்ச்சியாக பயங்கரவாதிகளாக தான பார்க்கபோகின்றார்களா? தொடர்ச்சியாக இவ்வாறு தமிழ் மக்களை புண்படுத்த போகின்றார்களா நல்லிணக்கத்தை ஏற்படுத்த முனையும் ரணில் விக்ரமசிங்க இதனை புரிந்துகொள்வாரா?

இங்க றோட்டிலே தான் படுத்துறங்குகின்றாகர்கள் ஆக தமிழ் மக்களிற்கு எதுவித தீர்வுகளும் கிடைக்கப்போவதில்லை அங்கே சுதந்திர தினித்திற்கு முன் செய்துமுடிக்கபோகின்றேன் என்றார் முடிந்ததா இல்லை

எங்களை துன்புறுத்தும் சம்பவமே தையிட்டியில் தொடர்கிறது இங்கு யாருமே இல்லை பல இடங்களில் இதோ இனி சுண்ணாகத்திலும் கந்தோரடையின் தெற்கு பக்கமாக தொடரபோகின்றார்கள் இப்படியான ஒவ்வொரு நிகழ்ச்சி நிரல்களையும் நிறைவேற்றி கொண்டு தான் போகினறார்கள்.

தமிழர்களால் ஒன்றும் செய்யமுடியாமல் இருக்கின்றது.இது மீண்டும் நாங்கள் சாத்வீகத்தினூடாக எதையும் பெறமுடியாது என்பதனை சிங்கள பெரும்பாண்மை தையிட்டி சம்பவத்தினூடாக புலப்படுத்துகின்றது.