பெண் அமைச்சரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய கும்பல் : அவுஸ்திரேலியாவில் அதிர்ச்சி

அவுஸ்திரேலியாவில் நடைபயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பெண் அமைச்சர் ஒருவரை கடத்தி மயக்க மருந்து கொடுத்து பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சம்பவம் அந்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து (ஞரநநளெடயனெ) பகுதியில் உள்ள எப்பூன் தொகுதியில் இருந்து எம்.பியாக தேர்வு செய்யப்பட்ட 37 வயது பெண்மணி பிரிட்டானி லாவ்கா (டீசவைவயலெ டுயரபய).

இவர் அவுஸ்திரேலிய பாராளுமன்றத்தில் சுகாதாரத்துறை துணை அமைச்சராகவும் செயற்பட்டு வருகிறார்.

 இந்நிலையில் இரவு நேரத்தில் தனது வீட்டின் அருகே வீதியில் பிரிட்டானி லாவ்கா நடை பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இதன் போது அவரை பிடித்து தாக்கிய மர்ம கும்பல் அவருக்கு மயக்க ஊசி செலுத்தி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளனர்.

இதுகுறித்து லாவ்கா தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த மேலும் சில பெண்கள் லாவ்காவை தொடர்பு கொண்டு தங்களுக்கும் இதுபோன்ற வன்கொடுமை சம்பவங்கள் நடந்துள்ளதாக கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அப்பகுதியில் தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டும் என குரல்கள் எழுந்துள்ளன. பெண் அமைச்சரையே மர்ம கும்பல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.