200இற்கும் மேற்பட்ட பயணிகளுடன் உக்ரைனில் இருந்து இந்தியா வந்தது முதல் விமானம்!

உக்ரைனில் பதற்ற நிலை அதிகரித்து வருகின்ற நிலையில், அங்கிருக்கும் இந்தியர்களை மீட்பதற்காக சென்றிருந்த விமானம் நள்ளிரவில் டெல்லி வந்து சேர்ந்துள்ளது.உக்ரைனில் 20 ஆயிரம் இந்தியர்கள் இருப்பதாக கூறப்படுகின்ற நிலையில், 241 பயணிகள் இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைனும் அதன் அண்டை நாடான ரஷ்யாவும் நீண்ட காலமாகவே மோதல் போக்கில் உள்ளன. இந்த மோதல் தற்போது உச்சமடைந்துள்ளது.இதனையடுத்து இந்தியா உள்ளிட்ட பல சர்வதேச நாடுகள் தங்கள் நாட்டு பிரஜைகளை மீட்பதில் கவனம் செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.