சீமானுக்கு விதிக்கப்பட்ட காலக்கெடுவால் பரபரப்பு

தன்னைப் பற்றி அவதூறாக பேசிய சீமான் இன்னும் 15 நாட்களுக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் தவறின் அவர் மீது வழக்கு தொடுக்கப் போவதாகவும் வீரலட்சுமி தெரிவித்துள்ள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்மைக்காலமாக வீரலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்து கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.

பொது வெளியில் என்னை தமிழர் அல்லாதவர் என தொடர்ந்து அவதூறு பரப்பி வரும் சீமான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 15 நாட்களுக்குள் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

இல்லையென்றால் சீமான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது திருவள்ளூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போகிறேன் என்று வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.