தாய்வானை சுற்றி வளைத்த சீன இராணுவம் : பிராந்தியத்தில் உச்சக்கட்ட பதற்றம்

பிராந்திய பதற்றத்தை அதிகரிக்கும் விதமாக தாய்வானை சுற்றி வளைத்து சீனா இராணுவப் பயிற்சியை மேற்கொண்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.

மேலும் இது தாய்வான் ஜனாதிபதிக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை என்றும் சீனா தெரிவித்துள்ளது.

தாய்வானை சீனாவுடன் இணைக்க வேண்டும் என்று சீனா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

ஆனால் சீனாவின் கூற்றுக்கு மறுப்பு தெரிவித்து  வரும் தாய்வான் தாம் தனி நாடு என தொடர்ந்து கூறி வருகிறது.

 இந்நிலையில், சீனாவின் இராணுவ பயிற்சிக்கு தாய்வான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது பிராந்தியத்தில் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் என தாய்வான் பாதுகாப்பு படைகள் தெரிவித்துள்ளன.

சீனாவின் இராணுவப் பயிற்சிக்கு பதிலடி கொடுக்கும் வகையில், தாய்வானும் தனது இராணுவத்தை தயார் நிலையில் வைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும், தாய்வான் கடற்படை கப்பல்கள் மற்றும் விமானப்படை விமானங்கள் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.