பெண்ணை கொடூரமாக கொன்ற சிறுவன்! வெளியான அதிர்ச்சி காரணம்



கடந்த 2 வருடத்திற்கு முன்னர் நடந்த திருட்டு சம்பவத்திற்கு பழிவாங்கும் நோக்கில் 14 வயது சிறுவன் ஒருவன் 58 வயது பெண்ணை பாலியல் பலாத்காரத்திற்குட்படுத்தி கொலை செய்துள்ள சம்பவம் ஒன்று இந்தியாவில் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் கடந்த 30 ஆம் திகதி இடம்பெற்றுள்ளதையடுத்து, இது குறித்து தகவல்களை இன்று ( 05.02.2023) இந்திய ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தின் ஹனுமானா பகுதியில் வசிக்கும் 58 வயது பெண் ஒருவர் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மர்மான முறையில் கொலை செய்யப்பட்டிருந்தார்.

குறித்த பெண்ணின் கணவரும் மகனும் மருத்துவ சிகிச்சைக்காக வெளியூர் சென்றிருந்த வேலையில் இந்த கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளதால் இது திட்டமிட்ட படுகொலையா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளனர். அதன்போது அதிர்ச்சிக்குரிய உண்மை அம்பலமானது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இந்த பெண்ணின் வீட்டுக்கு பக்கத்தில் வசிக்கும் 14 வயது சிறுவன் ஒருவன் வந்துள்ளான். அப்போது அந்தச் சிறுவன், பெண்ணின் வீட்டிலிருந்த தொலைபேசியை திருடி விட்டான். அதைக் கண்டுபிடித்துள்ள அப்பெண்ணும் மற்றும் குடும்பத்தாரும் அவனை கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. இது அந்த சிறுவனை ஆத்திரமடையச் செய்துள்ளது.

இந்த நிலையில், குறித்த பெண்ணை பழிவாங்கப் போவதாக சிறுவன் தொடர்ந்து கூறி மிரட்டி வந்துள்ளான். இரண்டு ஆண்டுகள் கழித்து தனது ஆத்திரத்திற்கு பழி தீர்க்கும் விதமாக கொடூர செயலில் அவன் ஈடுபட்டுள்ளான்.

பெண்ணின் கணவரும், மகனும் வீட்டில் இல்லை என்பதை அறிந்து கொண்ட சிறுவன், ஜனவரி 30ஆம் திகதியன்று இரவு வீட்டிற்குள் நுழைந்துள்ளான். அப்போது அந்தப் பெண் உறங்கிக்கொண்டிருந்துள்ளார்.

அந்தப் பெண்ணை பிடித்து அவரது கை கால்களை கட்டிப்போட்ட சிறுவன், கூச்சலிட்டும் சத்தம் வெளியே கேட்கக்கூடாது என வாயையும் பொலித்தீன் மற்றும் துணிகளை வைத்து அடைத்துள்ளான். பின்னர் அருகே உள்ள பாழடைந்த கட்டடத்திற்கு அவரை தூக்கிச் சென்று அங்கு கூர்மையான ஆயுதங்களை வைத்து தாக்கி, பாலியல் பலாத்காரத்திற்குட்படுத்தி கொடூரமான முறையில் கொலை செய்துள்ளான்.

மேலும், பெண்ணின் அந்தரங்க உறுப்பை ஆயுதங்கள் மூலம் சிதைத்துள்ளதுடன், அவரிடமிருந்த நகைகளை கொள்ளையிட்டு தப்பியோடி தலைமறைவாக இருந்துள்ளான். 

இந்த நிலையில், சிறுவனை ரேவா மாவட்ட பொலிஸார் கைது செய்து சிறுவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.